திங்கள், ஜனவரி 04, 2010



வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம். ஆனால், அவை தான் வாழ்வை இனிமையாக மாற்றும்.

இந்திய உழவும் (RAW) உலக உளவும் (CIA)


உழவு என்ற சொல் மனிதனை நாகரிக வாழ்க்கைக்கு விரைவாக மாற்ற உதவியதாகவும், அதே சமயத்தில் அவனை வேகமாக முன்னேறவும் வைத்தது. ஆனால் உளவு என்ற சொல் மொத்த நாகரிகத்தையும், தனி மனிதனின் வாழ்க்கையை மட்டுமல்ல மொத்த நாடுகளின் மறைமுக விரைவான வீழ்ச்சிக்கும் காரணமாக அன்றும் இன்றும் இருக்கிறது.

மன்னர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்னால் வாழ்ந்த எந்த மனித கூட்டத்திற்கும் இந்த உளவு அவஸ்யமானதாய் இருக்கவில்லை. உழவு அதன் தொடர்ச்சியாக உழைப்பு. ஓய்வு அதன் பிறகு சிறப்பு என்று சிரித்து வாழ்ந்த கூட்டம். அவர்கள் வாழ்க்கையில் எந்த பொய்யும் இல்லை. அடுத்தவரை கண்டு கொள்ள வேண்டிய அவஸ்யமும் தோன்றவில்லை. வஞ்சகம் இல்லாமல் வாயாற உண்மையை மட்டும் சுவைத்து வாழ்ந்த கூட்டமது. ஆனால் ஆட்சி, அதிகாரம், அதிகார வர்க்க சார்பாளர்கள் என்று ஒவ்வொன்றாக நாகரிக வாழ்க்கையில் உருவாக, மாற்றம் பெற இந்த உளவு என்ற சொல் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. காலப்போக்கில் ஒவ்வொரு நாடும் இந்த உளவுத்துறை மூலமாகவே வளர்ச்சியும் வீழ்ச்சியும் பெற ஆரம்பித்து விட்டது.

தன்னுடைய வளர்ச்சி முக்கியம். அதே சமயத்தில் சார்ந்தவர்களின் வளர்ச்சி முடக்கப்பட வேண்டுமென்பது அதைவிட முக்கியம்"

இன்று எல்லாவிதங்களிலும் மனித நாகரிகம் வளர்ந்து விட்டது என்று நமக்கு நாமே பாராட்டு பத்திரம் வாசித்துக்கொண்டுருக்கும் இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு நாடும் ஏன் இராணுவத்திற்கு இத்தனை கோடிகளைக் கொண்டு போய் கொட்டுகிறது. ஏன் தினம் அச்சப்பட்டு அவஸ்த்தைப்பட்டுக்கொண்டு வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயக சக்திகள் என்பவர்களை மீறியும் ஒவ்வொரு நாட்டிலும் இந்த கண்களுக்கு தெரியாத நபர்கள் ஏன் ஆட்சி செலுத்துகிறார்கள். இன்றைய பாகிஸ்தான் பரிதாப நாடாக மாற்றம் பெற முக்கிய காரணம் என்ன?

அமெரிக்கா என்பது வெளியே இருந்து பார்க்கும் போது முதலாளித்துவ ஜனநாயக நாடு. இந்தியா ஜனநாயக நாடு என்று ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு மேல் உடையும் உள்ளே உள்ள வெளியே தெரியாத ஆடையும் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?

இலங்கையுடன் சம்மந்தப்பட்ட சில நாடுகளின் உளவுத்துறைகளையும், பிரிவுகளையும் வாசித்து பார்த்துவிடலாமே? காரணம் இனி வரும் மொத்த இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டங்களும் இந்த உளவு திருவிளையாடலும், உள்ளே உள்ள தமிழர்களின் ஒற்றுமையின்மையும் என்று ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டு வாழ்ந்த கதையைத் தான் பார்க்க வேண்டும்?

இலங்கை
Civil
State Intelligence Service (SIS)
Military
Directorate of Military Intelligence

இந்தியா
National Investigation Agency (NIA) என்ஐஏ
Central Bureau of Investigation (CBI) சிபிஜ
Intelligence Bureau (IB) ஐபி
Research and Analysis Wing (RAW) ரா

இஸ்ரேல்
ha-Mossad le-Modiin u-le-Tafkidim Myukhadim (Mossad) மொஸார்ட்

பாகிஸ்தான்
Inter-Services Intelligence (ISI) ஐஎஸ்ஐ
Military Intelligence (MI)
Intelligence Bureau (IB)
Federal Investigation Agency (FIA)
CIA -POLICE(Special Branch) (CIA)

இங்கிலாந்து
Secret Intelligence Service (SIS or MI6)
Security Service (colloquially MI5)
Government Communications Headquarters (GCHQ)

அமெரிக்கா
Central Intelligence Agency (CIA) சிஜஏ
Defense Intelligence Agency (DIA)
National Security Agency (NSA)
Federal Bureau of Investigation (FBI)

சீனா
Ministry of State Security (MSS)

அரசியல், வணிகம் என்று தொடங்கி இன்று ஆன்மிகம் மற்றும் தனிமனிதன் வரைக்கும் அத்தனை இடங்களிலும் நீக்கமற வியாபித்துள்ளது. பில்கேட்ஸ் முதல் அம்பானி வரைக்கும், அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரைக்கும், இங்கிலாந்து முதல் இந்தியா வரைக்கும், அமேசான் பழங்குடி போராட்டங்கள் முதல் மாவோயிஸ்ட் வரைக்கும் என்று பல திசைகளிலும் நீங்கள் பட்டியில் இட்டுக்கொண்டே போகலாம்.

சமூகநீதி, சமஉரிமை, பாரபட்சமில்லாத பங்களிப்பு என்று இன்று அத்தனை வளர்ந்த நாடுகளும் வளர்ந்து கொண்டுருக்கும் நாடுகளுக்கு போதனைகளை கற்றுக்கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால் அவர்களின் சுயபாதுகாப்பு என்பது அத்தனை பொக்கிஷமாய் போற்றி பாதுகாத்துக்கொண்டு பொய்மையாய் மாயக்கோட்டையாய் அத்தனை கெட்டியாக பாதுகாப்பது ஏன்?

இன்று உலகத்தின் எந்த மூலையில் நீங்கள் போய் நின்றாலும் அமெரிக்காவின் உளவு நிறுவனமான CIA என்ற வார்த்தை ஒன்று மந்திரம் போல் உசுப்பும். அல்லது விழியை மருளச் செய்யும். இரண்டே வழிமுறை. "அடிபணிந்து விடு. இல்லாவிட்டால் அழிந்து விடு". கவிழ்த்த ஆட்சிகள், அழித்த தலைவர்கள் என்று தொடங்கி கொசு நுழைய முடியாத இடத்தில் கூட உள்ளே நுழையும் வல்லமை பெற்றவர்கள். ஒரே காரணம் அவர்களின் திறமை குறைவு. ஆனால் விசுவாசமாய் மாற காத்துருப்பவர்கள் அதிகம்.

இஸ்ரேல் மொஸார்ட் முதல் இந்தியாவின் சிபிஜ,ஐ,பி,ரா என்று ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு உளவு நிறுவனம். கண்காணிப்பது மட்டுமல்ல, முடிந்தால் கலவரத்தையும் உருவாக்கு. தொத்தல் நாடுகள் கூட விதிவிலக்கல்ல.

அமெரிக்கர்கள் என்றும் அமெரிக்கர்கள். ஆனால் பிற எந்த நாட்டினரும், எந்த நாட்டிற்குள் சென்றாலும் பிரிந்து நின்று தன்னை தனியாக காட்டிக்கொள்வதற்கு ஏராளமான காரணிகள் உண்டு. மதம்,இனம்,பணம்,ஜாதி,ஆசைகள், பலவீனம் என்று தொடர்ச்சியாக போய்க்கொண்டே இருக்கும்.

மொத்த அரேபிய தேசமும் ஒன்றாக இணைந்தால்? ஓரே நுழைவு வாயில் வழியாகத்தான் எண்ணெய் வர்த்தகத்தை அவர்களுக்கு இடையே உருவாக்கப்பட்ட புரிந்துணர்வு மூலம் கொண்டு வந்தால் என்ன நடக்கும்? ஓரு வருடத்திற்குள் எவர் வேண்டுமானாலும் அமெரிக்காவிற்கு விசா இல்லாமல் வரலாம் என்று கடையை விரித்து வைக்கலாம்.

ஒருவர் மற்றொருவருடன் சேராத வரைக்கும், சேர முடியாத காரணிகளை உருவாக்கி வைத்திருக்கும் வரைக்கும் அமெரிக்கா மட்டுமல்ல தற்போது பாவ்லா காட்டிக்கொண்டுருக்கும் எந்த நாடும் வல்லரசு தான். இன்றும் என்றும்? தான் வளர்வது எத்தனை முக்கியமோ அதைப்போல மற்றவர்களை வளர விடாமல் தடுத்து வைத்திருப்பதும், தனக்கு கீழே வைத்துருப்பதும் அத்தனை முக்கியம். அதனால் தான் ஒவ்வொரு நாடும் உளவு நிறுவனங்களையும், ஆள்காட்டிகளையும் உருவாக்கி மற்ற நாடுகளை முடிந்தவரைக்கும் உருக்குலைத்துக்கொண்டே இருக்கிறது.

வளர்ச்சி என்பது திறமை என்பதாக இருந்தால் ஏன் மற்ற நாடுகளின் மேல் இத்தனை அக்கறை? ஆட்சிக்கு வருபவர்கள் என்பவர்கள் அந்த ஐந்து வருடங்கள். ஆனால் ஆட்சியாளர்களையும், என்றும் ஆண்டு கொண்டுருக்கும் அதிகார வர்க்கத்தையும் என்றுமே தங்களுடைய பிடியில் வைத்திருக்கும் கார்ப்ரேட் கணவான்களின் ஆசை, விருப்பம்,நோக்கம் என்பதில் தொடங்குவது தான் பல நாடுகள் பாதாளத்தில் போய் விழுவதும், பல வாழ்வுரிமைப் போராட்டங்கள் பள்ளத்தில் தள்ளி மூடப்படுவதும் என்பதில் முடிந்து விடுகின்றது.

நீங்கள் பருகும் ஒரு பாட்டில் கோக், விரும்பி தேய்த்து குளிக்கும் சோப், விரும்பும் வாசனை திரவியங்கள் அத்தனை முகம் தெரியாத உலகத்தை தங்கள் கைபிடிக்குள் வைத்துருக்கும் முதல் நூறு பணக்காரர்களுக்கு உங்களை அறியாமலே அவர்களின் சொத்துக்களையும் ஆசைகளையும் அதிகப்படுத்திக்கொண்டுருக்கிறீர்கள் என்பதை உங்களால் உணர முடியுமா?

ஒரு கோக் நீங்கள் வாங்கும் போது இங்கே உள்ள காளிமார்க் பானத்தின் தொழிற்சாலையின் செங்கல் மெதுமெதுவாக உருவப்பட்டுக் கொண்டு இருக்கிறது என்பதை யோசித்துப் பார்ப்பதுண்டா?. அந்நிய மூதலீடு இல்லாமல், வளர்ச்சி அடைந்த நாடுகளின் உதவி இல்லாமல், அவர்களின் விஞ்ஞான கருவிகள் இல்லாமல் நாம் வாழ முடியுமா? என்ற உங்களின் குதர்க்கத்தனமாக கேள்வியும் கேலியும் புரிந்தாலும் அந்த கார்ப்ரேட் கணவான்களின் ஆசைக்காக, தேர்ந்தேடுக்கப்படும் ஜனநாயகவாதிகள், அதிகாரவர்க்கங்கள், ஆள்காட்டிகள், கைகூலிகள், என்று தொடங்கி உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளையும் தங்கள் கண் அசைவில் அவர்கள் வைத்துருக்கும் வித்தையை உங்களால் உணர வாய்ப்பு உள்ளதா?

அரசாங்கத்தின் உளவு என்பது நாட்டின் வளர்ச்சியை விட மற்றவர்களின் வீழ்ச்சியை விரைவு படுத்துவது. தனி மனித கார்ப்ரேட் கண்வான்களின் அடியாள் பட்டாளங்கள் என்பது உலகமயமாக்கல் என்ற தத்துவத்தை பரப்பி தன் வலைக்குள் வீழ்ந்த நாடுகளை எழ முடியாமல் என்றும் வைத்துருப்பது. இந்த இரண்டு தண்டவாளத்தில் தான் உலக உருண்டையில் உள்ள 70 சதவிகித நாடுகள் ஓடிக்கொண்டு இருக்கிறது.

1948 முதல் கடந்த 60 ஆண்டுகளில், இலங்கையில் இன்றைய சீனா போல் வேறு எந்த வெளிநாடுகளும் இப்போது போல அப்பட்டமாக ஆளுமை செலுத்தவில்லை. மின்திட்டம், சாலைவசதி,இராணுவ உதவி என்று தொடங்கி காலவரையற்ற கடன் ஒப்பந்தங்கள் வரைக்கும் என்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது. காரணம் என்ன?

அதே போல் நேரு தொடங்கி இன்று மன்மோகன் சிங் வரைக்கும் இன்று போல் இலங்கைக்கு இத்தனை ஆதரவாக இருந்தது இல்லை?

தனிமனிதர்கள் சேர்ந்த கூட்டமென்பது நாடாக நீங்கள் நினைத்தால் அது தவறு. தகுதியானவர்களின் ஆசைப்படி ஆள நிணைப்பதன் தொடக்கம் தான் ஒரு நாட்டிற்கும் இன்னோரு நாட்டுக்கும் வெளியே தெரியாத, சொல்ல முடியாத, காட்டிக்கொள்ளாத புரிந்துணர்வு.

இத்தனை தமிழர்களை கொன்று குவித்தும் ராஜபக்ஷே மேல் ஏன் இன்று வரைக்கும் எந்த நாடும் மிகப் பெரிய அளவில் எதிர்ப்பை காட்டவில்லை. நீங்கள் மேலாதிக்க சக்தி என்றால், உங்கள் மூலம் எதிர்ப்பு வருகிறது என்று தெரிந்தால் உங்களின் தேவையை அங்கு நிறைவேற்ற காத்துக்கொண்டுருப்பார்கள். வணிகம் சார்ந்த ஒப்பந்தங்கள். வா வா என்றழைக்கும் ஆசை சார்ந்த விசயங்கள் என்று ஏராளமான மறைபொருள் உண்டு.

தமிழ்நாட்டில் உள்ள சிமெண்ட ஆலை, ஊடகம், மென்பொருள் அதிபர்கள் அத்தனை பேர்களும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையில் மூதலீடு செய்து இருப்பதும், அதற்கான பரஸ்பர நல்லெண்ண உடன்படிக்கைகள், பெற்ற ஆதாயங்கள், இடைத்தரகர்கள் என்று ஏராளமான பட்டியல் உண்டு. இந்தியா என்ற நாட்டிற்கு இலங்கை அமைதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட இது என்றுமே இந்தியாவிற்கு விசுவாசமாக இல்லாவிட்டாலும் கூட விரோதியாக மாறிவிடக்கூடாது என்ற உள்ளார்ந்த அர்த்தம் தான் இத்தனை உதவிகளும்.

திம்பு பேச்சு வார்த்தை, ராஜிவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம் என்று மேம்போக்காக நாம் ஊடகத்தில் தலைப்பு செய்திகளில் வாசித்து விட்டு கேட்டு விட்டு நகர்ந்து விடுகிறோம். ஆனால் அதற்குப் பின்னால் உள்ள அசுரத்தனமான உளவுத்துறையின் உழைப்பும், மிரட்டலும், அச்சப்படுத்துதலும் என்று தொடங்கி மொத்த இலங்கை வாழ்வுரிமை போராட்டங்களை அல்லோகல்லப்படுத்திய விவகாரங்கள் அத்தனை முடைநாற்ற வகையைச் சேர்ந்தது.

இதையெல்லாம் ராஜதந்திரம் என்ற வார்த்தைகளுக்குள் அடக்கி விடுகிறார்கள். ராஜாவும் இல்லை. ராஜ்யமும் இல்லை. வெறும் தந்திரங்களை வைத்துக்கொண்டே இலங்கை ஆட்சியாளர்கள் இன்று வரைக்கும் வளர்ந்து மொத்த தமிழினத்தை மூடுகுழி போல் ஆக்கிவிட்டார்கள். ஆனால் இன்றும் இந்தியாவில் இலங்கை என்பது மிரட்டும் அன்புத்தம்பி. இந்தியா என்பது பயந்த பெரியண்ணன்.

ஒவ்வொரு நாடும் தன்னுடைய மேலாதிக்கத்தை, பிராந்திய நலத்தை, வணிகம் சார்ந்த எதிர்கால முன்னேற்பாடு திட்டங்களை காரணத்தை பின்னால் வைத்துக்கொண்டு அத்தனை தந்திர வலைகளை வீசிக்கொண்டே முன்னேறி வந்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு பக்கம் இந்தியா, மறுபக்கம் சீனா. இடையில் பாகிஸ்தான், ரஷ்யா,அமெரிக்கா என்று நீண்ட பட்டாளங்கள். நரி பஞ்சாயத்து செய்து கொடுத்த அப்பம் போல் கொடுத்துக்கொண்டுருக்கும் இலங்கை இன்னும் சில ஆண்டுகளில் முழிக்குமா? மூழ்கி விடுமா என்று தெரியவில்லை.

thanks
தேவியர் இல்லம் திருப்பூர்

ஞாயிறு, மார்ச் 01, 2009



வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம். ஆனால், அவை தான் வாழ்வை இனிமையாக மாற்றும்.

ஒரு நிமிடம் சிந்தியுங்கள்

நண்பர்களே..! நீங்கள் புகைப்பதனால் பயனேதும் இல்லை. அதற்கான பணத்தில் உலகில் வாழும் ஒரு குழந்தையின் பசியை போக்கமுடியும்.
ஒரு நிமிடம் சிந்தியுங்கள்

சனி, பிப்ரவரி 28, 2009



வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம். ஆனால், அவை தான் வாழ்வை இனிமையாக மாற்றும்.

சிறிலங்கா பொருளாதாரத்தை முடக்குவோம் வாங்க...


புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களே!

தமிழர் தாயகப் பகுதிகள் மீது முற்று முழுதான இராணுவ, பொருளாதார யுத்தத்தை ஏற்படுத்தி தமிழர் பலத்தை சிதறடித்து அவர்களை தனக்கு கீழ்படியும் ஒரு இனக்குழுவாக மாற்றுவதற்கான முழுமுயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் வரிந்து கட்டியிறங்கியுள்ளது. இதன் ஒருகட்டமாக சிங்கள இராணுவ இயந்திரத்தை அப்பாவி தமிழ்பொதுமக்கள்மீது தொடர்ச்சியாக கட்டவிழ்த்துவிட்டு அவர்களை பால், வயது வேறுபாடின்றி கொன்றொழித்து வருகின்றது. தமிழர் வாழ்வாதாரத்தை சிதைத்து அவர்களை பட்டினிபோட்டு இனப்படுகொலை செய்வதை குறியாகக் கொண்டு தமிழர் தாயகப் பகுதிகளை நோக்கிய சகல வழங்கல் பாதைகளையும் மூடி ஒரு இறுக்கமான பொருண்மிய தடையை ஒட்டு மொத்த தமிழினம் மீதும் சிங்களஅரசு அமுல்படுத்தி வருகின்றது. சிறிலங்கா அரசின் இந்த நாசகார திட்டத்தை தவிடுபொடியாக்க தாயகத்தில் எதிரியின் இராணுவத்தை விரட்ட தமிழர்சேனை முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது.

இதேவேளை சிறிலங்கா அரசின் இந்த கபட எண்ணத்தை அடையாளம் கண்டு அதன் இனவாதநோக்கை அனைத்துலக அரங்கில் அம்பலப்படுத்தி சிறிலங்காவின் தமிழர் மீதான அடக்குமுறைக்கு முதுகெலும்பாக தொழிற்படும் அதன் பொருளாதாரத்தை முடக்கவேண்டிய பெரும்பொறுப்பு புலத்தில் வாழும் எம்தமிழ் உறவுகளுக்குரியதாகின்றது. எனவே தமிழர் தாயகத்தின் மீது சிறிலங்கா ஏற்படுத்திய பொருளாதாரத்தடைக்கு ஒப்பான ஒரு பொருளாதாரத்தடையை சிறிலங்காமீது அனைத்துலக சமூகம் ஏற்படுத்தக் கூடிய ஒரு ஏதுநிலையை ஏற்படுத்தும் ஒருமுன்முயற்சிக்கு உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பு வேண்டிநிற்கப்படுகின்றது. சிறிலங்கா அரசாங்கத்தின் அனைத்துலக சட்டங்களுக்கு முரணான இனத்துவேச, இனவொடுக்கு, இனவழிப்பு நடவடிக்கைகளை வெளிக்கொணர்ந்து அனைத்துலக சமூகத்தினையும் சிறிலங்காவினூடன கீழ்காணும் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துமாறுகோரும் ஒரு பரந்துபட்ட போராட்டத்தை புலம்பெயர்ந்து வாழும் எம்தமிழ் உறவுகளை முன்னெடுக்குமாறு வேண்டுகின்றோம்.





01. அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிராக பிரயோகிக்கப்படும் அனைத்து வகையான ஆயுத ஏற்றுமதிகளையும் சிறிலங்காவிற்கு விற்பனை செய்வதை முற்று முழுதாக நிறுத்தக் கோருதல்.

02. தமிழருக்கெதிரான அடக்குமுறைகளினை முடிவிற்கு கொண்டுவரும்வரை சிறிலங்காவிற்கான அனைத்துலக நிதியுதவிகளை நிறுத்தக் கோருதல்.

03. சிறிலங்காவிற்கு உல்லாசப்பயணிகள் வருவததை நிறுத்தக் கோருதல்.

04. சிறிலங்காவில் முதலீடு செய்வதை நிறுத்தக் கோருதல்.

05. சிறிலங்காவின் உற்பத்தியாகும் பொருட்களை புறக்கணிக்கக் கோருதல்.

06. புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் சிறிலங்கா வங்கிகளுக்கூடாக தாயக உறவுகளுக்கு பணம் அணுப்புவதை தவிர்த்து வேறுவழிகளை கையாளுதல்.

07. சிறிலங்கா வங்கிகளில் வைப்பிலிட்டுள்ள பணத்தை உடனடியாக மீளப்பெறுதல்.

08. சிறிலங்கா விமான சேவையில் பயணித்தலை தவிர்த்தல்.

thanks
nathiyosai

திங்கள், பிப்ரவரி 02, 2009



வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம். ஆனால், அவை தான் வாழ்வை இனிமையாக மாற்றும்.

புலிகளின் அடுத்த மூவ்!!!


போர் தரும் வேதனையைவிட, ‘தங்கள் தகப்பன் நாடான இந்தியா தங்களை ஆதரிக்கவில்லை!’ என்கிற வேதனைதான் ஈழத்தமிழர்களை வாட்டி யெடுக்கிறது.
இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் பிரணாப் முகர்ஜியின் பயணமும் ‘வந்தார்… சென்றார்’ என்கிற ரீதியில் ஒரு சம்பிரதாயமாக நடந்து முடியவே, இறுதி நம்பிக்கையையும் இழந்து தவிக்கின்றன தமிழ் உறவுகள்.

காவுகொண்ட கறுப்புத் திங்கள்!
‘முல்லைத்தீவு நகரைப் பிடித்துவிட்டோம்!’ என்று கடந்த 25-ம் தேதி இலங்கை ராணுவம் அறிவித்திருந்த வேளையில், விசுவமேடு சந்தி பகுதியில் தங்களுடைய கடைசி பீரங்கித் தளத்தின் மூலமாகக் கடுமையான எதிர்த்தாக்குதலைக் கொடுத்துக்கொண்டிருந்தனர் புலிகள்.



இந்த நேரத்தில், ‘புலிகளின் சிறப்புத் தற்கொலைப் படையணி, சாதாரண மக்களாக மாறி ராணுவ இலக்கு களின் மீது கடுமையான தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்போகிறார்கள்!’ என்றொரு வதந்தி ராணுவத்தின் உளவுப்பிரிவுக்கு வர… அதுவே, பொதுமக்களுக்கு எமனாக அமைந்துவிட்டது.

உடனே தமிழ் மக்களின் மீது அரக்கத்தனமான தாக்கு தலில் இறங்கிவிட்டது ராணுவம்.

‘மக்கள் பாதுகாப்பு வளையங்களாக’ அறிவிக்கப்பட்டிருந்த புதுக்குடியிருப்பு, விசுவமேடு, உடையார்கட்டு, வன்னிபுலம் போன்ற பகுதிகளின் மீது கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டது.

மக்கள் பாது காப்பு வளையங்களில் கூட்டம் கூட்டமாக சொந்தபந்தங்களுடன் தங்கியிருந்த அப்பாவி மக்கள் மீது நாலாபுறத்திலிருந்தும் கிளஸ்டர் குண்டுகளும் ஷெல் வீச்சுக்களும் தொடர்ந் திருக்கின்றன.

காலை 9.40-க்குத் தொடங்கி 10.30 வரைக்கும் நடந்த இந்தக் கோரத் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் பலியாக, மூவாயிரத்துக்கும் அதிகமானவர்கள் படுகாயத்துடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மருந்துப் பொருட்களை ஏற்றிவந்த ஐ.நா. குழு ஒன்றும் இந்தத் தாக்குதலில் மாட்டிக்கொண்டது. அந்தக் குழு கொழும் பிலுள்ள ஐ.நா. பிரதிநிதி நீல் புஹ்னுக்குத் தகவல் தந்திருக்கிறது.

அதற்குள் தாக்குதல் பற்றிய விவரங்கள் கசிந்துவிடக் கூடாது என்பதற்காக, கொழும்பு நகரம் முழுவதும் தகவல் தொடர்பைத் துண்டித்தது அரசு.

இதன்பிறகு நீல் புஹ்ன் இந்தத் தகவலை ஐ.நா-வுக்குத் தெரியப்படுத்த, ஐ.நா-வின் செயலாளர் பான் கி மூனிடம் இருந்து கடுமையான கண்டன அறிக்கை வந்திருக்கிறது.

அதோடு பிரிட்டன், நார்வே, அமெரிக்கா போன்ற நாடுகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டன.

இதைத் தொடர்ந்துதான் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அழைத்தார் அதிபர் மகிந்த ராஜபக்ஷே!

பிரணாப் பயணம்… தமிழர்கள் ஏமாற்றம்!
கடந்த 27-ம் தேதி இலங்கை சென்ற பிரணாப், உடனடியாக அதிபர் மகிந்தாவை சந்தித்தார். ராணுவ தளபதி சரத் ஃபொன்சேகா, பிரணாப்பிடம் போர் நிலவரம் குறித்து விளக்கியிருக்கிறார்.



இலங்கையிலிருந்து அவர் கிளம்புவதற்கு முன், ‘இலங்கையில் ராணுவ நடவடிக்கைகள்தான் இயல்பு நிலை திரும்ப உதவும். இந்தியா-இலங்கை உறவுகள் மேம்பட்டிருக்கிறது!’ என்று சொல்ல… அது தமிழர்கள் மத்தியில் கோபத்தைக் கிளப்பி யிருக்கிறது.

இதுபற்றி தமிழ் எம்.பி-க்கள் சிலரிடம் பேசினோம். ”இந்தியா தலையிட்டால்தான் பிரச்னை தீரும். இலங்கையில் பிரச்னை தீவிர மானதும் தமிழக முதல்வர் கலைஞர் அதுக்காக அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைப்பதில் வேகம் காட்டினார்.

ஆனால், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதில் காட்டலை. அப்படி அவர் அழுத்தம் கொடுத்திருந்தா, என்னிக்கோ பிரணாப் வந்திருப்பார்.

அதே மாதிரி பிப்ரவரி 3-ம் தேதி தி.மு.க. செயற்குழுவைக் கூட்டி இலங்கைப் பிரச்னையில் அடுத்த கட்டம் குறித்து முடிவெடுக்கப்போறதா சொல்லியிருக்கார் கலைஞர்.

இந்த நிலைமையில, முதல்வருக்கு எந்தச் சிக்கலும் ஏற்படாதவாறு இலங்கைக்கு வந்திருக்கார் பிரணாப்.

இங்கே அவர், தமிழ்ப் பிரதிநிதி கள் யாரையும் சந்திக்கலை. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரா நடக்கும் விஷயங்களை அவரிடம் சொல்ல நினைத்திருந்தோம்.

ஆனா, அவர் யாரையும் சந்திக்கலை. இப்படியரு நிலைப்பாட்டில், பிரணாப் இலங்கைக்கு வராமலேயே இருந்திருக்கலாம்!” என்கிறார்கள் கொதிப்புடன்.

செம்மணி புதைகுழிகளும் சிங்கள அட்டூழியமும்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி-க்கள் நம்மிடம், ”1995-ம் ஆண்டு புலிகளிடமிருந்து யாழ்ப்பாணம் நகரை ராணுவம் கைப்பற்றியபோது, அங்கிருந்த நலன்புரி நிலையங்களில் தஞ்சமடைந்த மக்களில் 600 பேரை கொன்று செம்மணியில் புதைத்தது.

இந்த கொடூரத்துக்குப் பின்புலமாக இருந்தவர் சரத் ஃபொன்சேகா.

அந்த பயங்கரத்தைத் திரும்பவும் நடத்துகிறார் அவர். ராணுவத்தின் தொடர்ச்சியான எரிகணை மற்றும் வான்கணைத் தாக்குதல்களுக்கு பயந்து வரும் மக்கள், வவுனியாவில் அரசாங்கம் அமைத்திருக்கற மக்கள் நலன்புரி நிலையங்களில்தான் தங்கறாங்க.

அப்படித் தங்குபவர்களில் ஆண்களைத் தனியே அழைச்சுக்கிட்டுப் போய் சித்ரவதை பண்ணிக் கொல்றாங்க. பெண்களை விசாரணைங்கிற பெயரில் பலாத்காரம் செஞ்சு சின்னாபின்னப்படுத்தி கொன்னுடுறாங்க.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இப்படி 25 இளைஞர்களும் 27 பெண்களும் கொல்லப்பட்டிருக்காங்க. கொழும்பின் மையப் பகுதியான புரக்கோட்டை முழுவதும் தமிழ் தொழிலதிபர்கள்தான் ஆதிக்கம் செலுத்தறாங்க.

இதை ஒழிக்கறதுக்காக புரக்கோட்டை பகுதியை அரசாங் கமே எடுக்கப் பார்க்குது. இங்கே சிங்களர்களை குடியேத்தி, தமிழ் தொழிலதிபர்களை ஒழிக்கணும்னு நினைக்குது.

இதுதவிர, போர் நடந்தப்ப கிழக்குப் பகுதியில் இருந்த தமிழர்களில் பலர், அகதிகளா இந்தியாவுக்குப் போய்ட்டாங்க.

இன்னும் சிலர் வடபகுதிகளில் குடியேறிட்டாங்க. அதனால, கிழக்குப் பகுதியில நிறைய இடங்கள் காலியா இருக்கு. இப்போ இந்த இடங்களில் சிங்களர்களைக் குடியேத்துறாங்க.

அதிபர் மகிந்தாவோட சொந்த ஊரான அம்பலாந்தொடை, காலே, திசமார, தங்கால, மாத்தலே, கழுத்தர போன்ற பகுதிகள்ல இருக்கற சிங்களர்களுக்குப் பத்து ஏக்கர் நிலத்தை இலவசமா கொடுத்து கிழக்குப் பகுதியில குடியமர்த்தறாங்க. இதனால

தமிழர்களோட நிலம் பறிபோகுது. என்னிக்காவது எங்க மக்கள் திரும்பி வந்தா, நிக்க இடமிருக்காது.

வடக்கைக் கைப்பற்றிய பிறகும் இதே மாதிரியான நடவடிக்கைகளைத்தான் மேற்கொள்வாங்கன்னு பிரணாப்கிட்ட விளக்க நினைச்சோம். முடியலை!” என்றவர்கள் தொடர்ந்து…

ஏனிந்த மௌனம்..?
”முல்லைத்தீவு மாவட்டம் என்பதே ஒட்டுமொத்தமாக புதுக்குடியிருப்பு, விசுவமேடு, தர்மபுரம், ருத்ரபுரம் உள்பட பத்து கிராமங்களை உள்ளடக்கியதுதான்.

தற்போது புதுக் குடியிருப்பு என்ற ஒற்றைக் கிராமத்தில்தான் தமிழர்கள் முடக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த சமயத்திலும்கூட புலிகள் பெரியளவில் எதிர்ப்புத் தாக்குதல் நடத்தாதது, புலிகள் ஆதரவாளர்களுக்கே குழப்பமாக இருக்கிறது.

‘புலிகளிடம் வெறும் 1,500 பேர்தான் இருக்கிறார்கள், அதனால்தான் அவர்களால் ராணுவத்தை எதிர்க்க முடியவில்லை!’ என்கிறார் கருணா.

அமைதிப் பேச்சு வார்த்தையின்போது 31,000 பேர் புலிகள் இயக்கத்தில் இருந் ததாகவும், அடுத்தடுத்த சில வருடங்களில் போரால் 5,000 பேர் இறந்துவிட்டதாகவும், கிழக்குப் பகுதி பிரிவின்போது 6,800 பேர் தன்னுடன் வந்துவிட்டதாகவும் அவர் சொல்கிறார்.

அப்படிப் பார்த்தாலும் சுமார் 19,000 பேர் மீதி இருக்கவேண்டுமே? எங்கள் கணக்குப்படி புலிகளிடம் தற்போது பயிற்சி பெற்ற 20,000 பேர் இருக்கிறார்கள்.
ஆனால், இவர்களை வழிநடத்த சரியான தளபதிகள் இல்லை. பல போர்முனைகளை வெற்றிகரமாக நின்று நடத்திய பிரிகேடியர் பால்ராஜின் மறைவு, புலிகளுக்குப் பெரும் இழப்பு.

இருக்கிற ஒன்றிரண்டு நல்ல தளபதிகளையும் இழந்துடக் கூடாதுன்னு நினைக்கிறார் பிரபாகரன்.

தற்போது புதுக்குடியிருப்பில் முடங்கியிருந்தாலும், திறமை வாய்ந்த லெப்டினென்ட் கர்னல் பானுவின் தலைமையில் போர் முனையில் எதிர்ப்புத் தாக்குதலை ஆரம்பிக்கப் போறாங்க.
அதுவுமில்லாமல் ஓயாத அலைகள்-1, ஓயாத அலைகள்-2 உள்ளிட்ட பல முக்கியமான சமர்களை நடத்தியது சார்லஸ் ஆண்டனியின் ‘எலைட் ஃபோர்ஸ்’தான்.

இது எப்போது வேண்டுமானாலும் தற்கொலைப்படையா மாறுகிற நிலையில் இருக்கு.
300 பேர் இருக்கற இந்த ஸ்பெஷல் எலைட் ஃபோர்ஸை இதுவரைக்கும் களத்துக்குக் கொண்டு வரலை. அதேமாதிரி மாலதி படையணி, தலைவர் பிரபாகரனோட வலது கை மாதிரி.

300 பேர் இருக்கற இந்தப் படையணியையும் இதுவரைக்கும் களமிறக்கலை. இதுதவிர, கர்னல் சூசை தலைமையிலான சிறப்பு கடற்கரும்புலிகள் அணி எப்படிப்பட்ட தாக்குதல்களையும் சமாளிக்கும் திறன் படைத்த முன்னகர்வு அணி.

ஊருடுவித் தாக்குவதில் ஆண்டனி படையணி கில்லாடி. இப்படி தன்னோட நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கற பத்துக்கும் அதிகமான சிறப்புப் படையணிகளைத் தலைவர் பிரபாகரன் இதுவரைக்கும் களத்துக்கே கொண்டுவராதது ஏன்னு புரியலை.

தலைவரோட பையன் தலைமையில இருக்கற விமானப் படையையும் களத்தில் இறக்காததுக்கும் காரணம் புரியலை!” என்கிறார்கள்

புலிகளின் அமெரிக்க ஆயுதம்…
நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதிக்கட்டமாக வர்ணிக்கப் படும் இந்தப் போரில் ஒரு முக்கியக் காரணத்துக்காக புலிகள் காத்திருப்பதாகச் சொல்கிறார்கள், அவர்களுடைய ஆதர வாளர்கள்.

”இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான் போன்ற பல நாடுகள் செய்த ராணுவ உதவிதான் இந்தப் போரில் இலங்கை ராணுவத்தை வேகமா செயல்பட வச்சுருக்கு.

இதனால ஆசியாவில் அமெரிக்காவுக்கு எதிரான ஒரு வலு வான கூட்டணி அமைஞ்சுருக்கற மாதிரியான தோற்றம் ஏற்பட்டிருக்கு. இதை அமெரிக்கா விரும்பலை.
புலிகள் ஆதரவு மனப்பான்மை உள்ள ஹிலாரி கிளின்ட்டன் இப்போ அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராகி இருக்காங்க.

வரும் பிப். 4-ல் லண்டன், அமெரிக்கா, கனடாவில் இருக்கற சில முக்கிய தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் ஹிலாரியை சந்திக்கப் போறாங்க.

தெற்காசியாவில் அமெரிக்காவுக்கு எதிரா சீனா அமைக்கும் கூட்டணி பற்றியும், அதில் இலங்கையின் பங்கு பற்றியும் அவரிடம் விவரிப்பாங்க. அமெரிக்காவை கன்வின்ஸ் செய்துட்டா போதும்…

அதுக்குப் பிறகு சி.ஐ.ஏ., எஃப்.பி.ஐ. மூலமா புலிகளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வாங்க. அதுக்குப் பிறகு புலிகளோட தாக்குதல் வீரியமாகும்.

சிங்கள ராணுவத்தோட கொலைவெறியில் தொய்வு வந்துடும். தமிழ்நாட்டுத் தலைவர்கள் சிலரும் இந்த நடவடிக்கைக்கு உதவி பண்றாங்க.

இதுக்காக சி.ஐ.ஏ-வின் தெற்காசியப் பிரதிநிதி சார்லஸை சமீபத்தில் சென்னையில் வைத்து விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமா வளவன் சந்தித்திருப்பதாகவும் தகவல்.

பிப். 4-ல் ஹிலாரியின் சந்திப்புக்குப் பிறகு அமெரிக்காவின் உதவியைப் பொறுத்துதான் புலிகளின் அடுத்தகட்ட மூவ் இருக்கும்…” என்கிறார்கள்.

எங்கே பிரபாகரன்?
‘பிரபாகரன் எங்கும் தப்பியோட முடியாதபடி பாதுகாப்பு அரண்களை அமைத்திருக்கிறோம். அவர் எங்கள் கையில் மாட்டுவது உறுதி!’ என்கிறார் ராணுவ தளபதி சரத் ஃபொன் சேகா.

ஆனால் புலிகளின் ஆதரவாளர்களோ, ”தலைவர் முல்லைத் தீவில் எங்களுடன்தான் இருக்கிறார். ஏற்கெனவே இதுபோல் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டபோதெல்லாம், ‘நான் எதிரி களிடம் சிக்கும் நிலை ஏற்பட்டால், சயனைட் சாப்பிட்டு மரணமடைய விரும்பவில்லை.

அதனால் நீங்களே என்னை நெஞ்சில் சுட்டு, வீர மரணமடைய வைக்கவேண்டும்!’ என்று தலைவர் கூறியிருக்கிறார். இப்போதும் அதைத்தான் விரும்பு வார்.

ஆனால், தலைவரின் மகன் சார்லஸ் ஆண்டனி, தலை வரை முல்லைத்தீவிலிருந்து அழைத்துச் செல்ல விரும்புகிறார்.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் எத்தியோப்பியாவுக்குப் பக்கத்திலுள்ள ஒரு குட்டி நாடு எரித்ரியா. இந்த நாட்டில் புலிகள் இயக் கத்தை முழுமையாக ஆதரிக்கிறார்கள்.

ஏற்கெனவே ஐ.நா. சபையில்கூட புலிகளுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தது இந்த நாடு.

அதனால், தங்களிடமுள்ள ரஷ்யத் தயாரிப்பான அதிவிரைவு குட்டி நீர்மூழ்கிக் கப்பல் மூலமாக அவரை அங்கே அழைத்துச்செல்ல நினைக்கிறார் சார்லஸ்.

தலைவரின் மனநிலைதான் புரியவில்லை!” என்கிறார்கள்.

சனி, ஜனவரி 31, 2009



வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம். ஆனால், அவை தான் வாழ்வை இனிமையாக மாற்றும்.

தூத்துக்குடியில் பூத்த முத்துக்குமரன்


தொப்புள் கொடியில்
உயிர்க் கொடி
ஏற்றிய தோழா
ஈழத் தமிழர்களின் முத்துக்குமரா!

இணையத்திலே உன் அழகிய
முகம் பார்த்தோம்
இதயத்திலே கருகிப் போனது
எங்கள் மனம்!

எவ்வளவு இளகிய
மனம் கொண்டவன் நீ
எங்களுக்காய்...
ஏன் கருகிப் போனாய்?

தூத்துக்குடியில்
முத்துக் குளித்தவன் நீ
சாஸ்திரி பவனில்
ஏனையா தீக்குளித்தாய்?

குடம் குடமாய்
நாங்கள் அழுது வடித்த
எங்கள் கண்ணீரில்
உன் முகமே பூக்கிறது!

எம் தமிழ்மீது
நீ கொண்ட பற்றுக்கு
எல்லையே இல்லை என்பதை
இப்படியா உணர்த்துவது!

தமிழினத் தலைவர்கள்
என்று சொல்லத் துடிக்கும்
எங்கள் தலைவர்களின்
நாக்கை அறுத்தாய் நீ!

கையாலாகாத பரம்பரை
என நினைத்தாயோ
பூவாய் இருந்தவன் நீ
புயலாய் ஏன் வெடித்தாய்?

முப்பது ஆண்டுகள்
நாம் சுமந்த வலிகள்
போதாத ஐயா
ஏனையா எரிந்து போனாய்?

பெரு வலியோடு
உனைப் பெற்ற தாயை
எந்த முகத்தோடு போய்
நாங்கள் இனிப் பார்ப்போம்

எட்டாத தூரத்தில்
வாழ்ந்தாலும்
வாகை மரம் போல
வாடிப் போய் நிற்கிறோம்

மண்ணெணையை
உன் மீது ஊற்றி
தமிழ்மண்ணைக் காக்க
ஏனையா உனைக் கொடுத்தாய்?

தமிழீழம் வாழவே
எங்களை வாழ்த்தி
உன் வாழ்வை
ஏனையா நீ அழித்தாய்?

மரணத்திடம் மண்டியிடாமல்
மண் எங்கும் ஓடுகிறோம்
மரணத்தை தேடி நீ
ஏனையா ஓடினாய்?

தமிழீழ வரலாற்றில்
முத்தான உன் பெயர்
இனி எழுத்தாணிகளின்
முதல் வரியாகட்டும்!

உன் தியாகத்தின் முன்
நாங்கள் வெறும் சருகுகளே!
தமிழகத்தின் தாய்மடியில்
கண்ணீர் அஞ்சலி செய்கிறோம்!

- வசீகரன்
நோர்வே

புதன், ஜனவரி 28, 2009



வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம். ஆனால், அவை தான் வாழ்வை இனிமையாக மாற்றும்.

உறவுகளே... என்னை மன்னித்துவிடுங்கள்..!

உறவுகளே... என்னை மன்னித்துவிடுங்கள்..!

தாயகத்தில் புலிவீரர்கள் உயிர்துறக்க அவர்கள் தியாகத்தால் புலத்தில் குளிர்காயும் கோழைகளில் நானும் ஒருவன்
எப்போதும் எம் தாயக இன உணர்வோடும் தமிழ் மொழிப்பற்ரோடும் வாழ்ந்து நாட்டுக்கு பெருமை சேர்ப்போம்.



சிங்களமே உன் பசிக்கு அப்பாவி தமிழரின் உயிர்தான் வேண்டுமா?



தமிழகமே உன் உறவுகளை நிலைமைகளை பார்.....



உலக சமுகமே எங்களை திரும்பி பார்க்கமாட்டாயா?

செவ்வாய், ஜனவரி 20, 2009



வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம். ஆனால், அவை தான் வாழ்வை இனிமையாக மாற்றும்.

கொலை வெறிக்கு இரையாகும் பாலஸ்தீனமும் - ஈழமும்



ஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதாம் என்றோர் முதுமொழி சொல்ல கேட்டிருப்போம் . அது பாலஸ்தீனருக்கும்- ஈழத்து மக்களுக்கும் எவ்வளவு பொருந்தும் என்பதை இன்று உலகம் கண்டு வருகிறது என்றுதான் சொல்லவேண்டும்! கலாங்கலமாக வாழ்ந்து வந்த பாலஸ்தீனர்கள் தங்கள் தவழ்ந்துத்திரிந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்டு வருகின்றனர். குழந்தை பெண்கள் என்றும் பாராமல் போர் வெறி கொண்ட இஸ்ரேல் படையினரால் குண்டுகள் வீசப்பட்டு ஆயிரகணக்கான உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கிறது.

உலகநாடுகள் பலவும் இந்த கொடிய செயலைக் கண்டித்தும் இஸ்ரேல் வான்வழி தாக்குதலையும் தரைவழி தாக்குதலையும் நிறுத்தியதாக இல்லை.

போரை நிறுத்தும்படி ஐக்கிய நாடுகள் சபை கேட்டுகே கொண்ட போதிலும் அதற்கு இஸ்ரேல் செவி சாயித்தாகத் தெரியவில்லை. மேலை நாட்டு வல்லரசுகள் தாங்கள் தயாரிக்கும் அதிநவீன ஆயுதங்களை போர் மேகங்கள் சூழ்ந்த மண்ணில் சோதித்துப் பார்ப்பதிலும் விற்பதிலும்தான் அதிக கவனம் செலுத்துகின்றனவேயன்றி உண்மையில் உயிர்களைக் காப்பது அவர்களின் நோக்கமில்லை.

ஈழத்தில் வீறுகொண்டு மண்ணை மீட்க போராடி நிற்கும் புலிகளை சிங்களப்படை தனித்து போராடி வெல்வது பகல் கனவு என்பதை உலகமே அறிந்த ஒன்று. எனவே இந்திய, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் ஆதரவோடு உதவிகளோடும் பயிச்சிகளோடும் தகவல்களோடும் சிங்கள படை இரத்த வெறிகொண்டு மக்களை கொன்று குவிக்கிறது.

இஸ்ரேல் பொலவே ஈழ மக்களை சிங்கள அரசு கொன்று குவிக்கிறது. வரலாற்று ரீதியில் அந்த மண்ணுக்குச் சொந்தமான தமிழ் மக்கள் கொடுமைகளுக்கு இலக்காகி மொழியையும் பண்பாட்டையும் தொலைத்து, அடிமையாக வாழ் வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டதன் விளைவால், உரிமை கேட்டு ஆயுதங்களைத் தூக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட ஈழத் தமிழர்கள், நாளும் கொல்லபடுகின்ர ஓர் அவலம் தொடர்கதையாகி விட்டது புலிகளை எதிர்த்து போரிடுவதாகக்க பள்ளி மீதும் மருத்துவமனை மீதும் குண்டுமழை பொழிந்து அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்து வருகிறது பேச்சுவார்த்தை சமாதானம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே படைபலத்தைப் பெருக்கி போரிடுவதில் இஸ்ரேல் அரசும் இலங்கை அரசும் ஒன்றையொன்று மிஞ்சி நிற்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

வெற்றிய - தோல்விய என்பதல்ல தற்போதைய பிரச்சனை! நியாயமா? அநியாயமா? என்பதுதான் கேள்வி. எது எப்படி இருப்பினும் ஈழ பிரச்சனையால் உலகளாவிய தமிழ்ச்சமுகம் இன்று தாங்கள் எந்த அளவுக்கு உலகத்தில் எள்ளி நகையாடப் படுகிறார்கள். ஒதுக்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்து வீறு கொள்ள வைத்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.

இஸ்ரேலின் கொடுமையால் பாலஸ்தீன மக்கள் படும் கொடுமைபார்த்து உலக முஸ்லீம் நாடுகள் ஓரணியில் திரண்டுள்ளதுபோல் நம் தமிழ்ச் சமுகமும் ஒன்றுபட (வேண்டும்) உணர இது நல்வாய்ப்பு என உலகார்ந்து அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

பொற்கோவில் பிரச்சினையில் இந்திர காந்தியை மெய்க்காவலனே சுட்டுகொன்றான். அதை மன்னித்த இந்திய அரசு; படைகளை அனுப்பி புலிகளை நிராயுதபாணிகளாக ஆக்கியதோடு, இளம் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமையின் விளைவால் அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி பழி தீர்க்கப்பட்டார்.

ஒரு நாட்டின் பிரதமரையே துப்பாக்கி கட்டையால் அடித்து அவமனத்திய நாட்டுடன் இந்திய அரசு கைகோர்த்து, ஈழமக்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை கண்டுகொள்ளதிருப்பதோடு, துனைபோகிறதே என்ற கேள்வி ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் தீயாய் எரிந்துகொண்டுக்கிறது.

சீக்கிய சமுகத்துக்கு ஒரு தீர்ப்பு, தமிழ் சமுகத்துக்கு ஒரு தீர்ப்பா? இல்லை குண்டடிப்பட்டு இறப்பது தமிழன்தானே என்ற ஏளனமா? பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதுபோல் ஈழ தமிழர் படும் அவலத்திற்கு குரல் கொடுப்பது போல் கொடுப்பதும் ஆதிதீவிர ஆதரவாளர்களை சிறை பிடிப்பதும் தமிழக அரசு நடத்திவரும் கபடனாடகமாகும். புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதன் வழி மாநில ஆட்சிக்கு ஆபத்துவந்து தமது ஆட்சி கவிழ்க்கப்படுமோ என்ற அச்சம் ஒருபுறம் புலிகளுக்கு ஆதரவுகாட்டாதிருந்தாள் தமிழ் துரோகி என்ற அவப்பெயர் வந்துவிடுமோ என்ற இருகொள்ளி நிலையில் உள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி.

இப்படி ஒவ்வொருவரும் தங்களை தற்காத்துக் கொள்வதில் தான் கவனமாக இருக்கிர்ரர்களே தவிர மனப்பூர்வமாக குரல் கொடுக்கிறவர்களாக 'பாட்டாளி மக்கள் கட்சி' 'விடுதலை சிறுத்தைகள்' 'தா. பாண்டியன்' 'வைகோ' மற்றும் தமிழ் திரை உலகில் உள்ள தமிழர்களில் சிலர் மட்டுமே




நன்றி
மலேசியா நண்பன்
ஞாயிறு இதழ் (18-01-2009)

நீதித் தாயே..! இன்னும் எவ்வளவு காலம் கண்ணை கட்டிக்கொண்டுஇருக்கபோகிராய்!